பா. ரெங்கதுரையின் சிறு குறிப்புகள்

Friday, February 18, 2011

ஊடகப் பார்வையில் பாதிரியார் கொலை


ஹோமோ செக்ஸ் பிரச்சினை காரணமாகத் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் பாதிரியார் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அது பற்றிய தினமலர் செய்தி.

இந்து சாமியார்கள் எவரும் சுய இன்பம் செய்து கொண்டால்கூட, அவர்கள் ஏதோ பெரிய கற்பழிப்பில் ஈடுபட்டு விட்டது போல, அதைப் பூதாகாரமான செய்தியாகத் திரித்துத் தமிழ் ஊடகங்கள் (தினமலர் உட்பட) வெளியிட்டு வருகின்றன.

ஆனால், பிற மத நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் - குறிப்பாகப் பாதிரியார்கள் - பெரும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும்போதுகூட அதைத் தந்திரமாக மறைத்து அல்லது மிகவும் பூடகமாக அச்செய்திகளை வெளியிடுவது தமிழ் ஊடகங்களுக்குக் கை வந்த கலை.

இந்தப் போக்குக்கு மற்றொரு சிறந்த உதாரணம் தினமலர் வெளியிட்டுள்ள இச்செய்தி:

பொன்ராஜ், பாதிரியாருடன் “நெருங்கி” பழகுவாராம்.

- என்று இருவருக்கும் இடையே உள்ள ஹோமோ செக்ஸ் உறவைப் பூடகமாகக் குறிப்பிட்டுள்ளது தினமலர். தினமலரே இந்த லட்சணத்தில்தான் இந்தச் செய்தியை வெளியிடுகிறது என்றால், மற்ற தமிழ்ப் பத்திரிகைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

பாதிரியார் கொலையை இந்து பயங்கரவாதம் என்று எழுதாத வரை, தமிழ் ஊடகங்களுக்கு பூச்செண்டுதான் தர வேண்டும்.

Labels: , ,

0 Comments:

Post a Comment

<< Home