பா. ரெங்கதுரையின் சிறு குறிப்புகள்

Thursday, February 17, 2011

இனம் இனத்துடன் சேரும்


இல. கணேசனுக்கு கருணாநிதி நேரில் வாழ்த்து

தமிழக பாரதிய ஜனதாவையும், இந்து இயக்கங்களையும் கருணாநிதி குடும்பத்திடம் அடகு வைத்து ஒழித்துக் கட்டியவர்களுள் முதன்மையானவர் இல. கணேசன்.

அதற்குக் கருணாநிதி காட்டும் சிறு நன்றியே இந்தப் பூங்கொத்து. கருணாநிதியின் வஞ்சக மனதில், அவர் கொடுத்தது பூங்கொத்து அல்ல; தமிழக பாரதிய ஜனதாவுக்கு வைத்த மலர் வளையம்.

இலங்கை இந்துக்களுக்கு துரோகம் செய்த கருணாநிதி, தமிழக இந்துக்களுக்கு துரோகம் செய்த இல. கணேசனை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவிப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. கருணாநிதியின் வார்த்தைகளில் சொல்வதானால், இனம் இனத்துடன் சேர்ந்திருக்கிறது. அவ்வளவுதான்.

Labels: , ,

0 Comments:

Post a Comment

<< Home