பா. ரெங்கதுரையின் சிறு குறிப்புகள்

Thursday, February 10, 2011

இந்து அறநிலையத் துறை பற்றி

தமிழ்ஹிந்துவில் வெளிவந்த அறநிலையத் துறை சம்மந்தமான கட்டுரை பற்றி: http://www.tamilhindu.com/2011/02/sand-blasting-in-temples/

பிரிட்டிஷ் காலனிய அரசாங்கம், இந்து அறநிலையத் துறை என்ற அமைப்பை ஏற்படுத்தியதே, கோயில்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கொள்ளையடிப்பதோடு, இந்து ஒற்றுமை ஏற்படுத்துவதிலும், இந்து மத வளர்ச்சியிலும் கோயில்கள் எந்தவிதப் பங்கையும் வகிக்கவிடாமல் செய்வதற்காகவே.

ஹிந்து விரோதி நேருவின் காங்கிரஸ் அரசாங்கமும், திராவிட இயக்கங்களும் இதே கொள்கையை/கொள்ளையைத் தொடர்ந்தன.

அரசாங்கம் இந்து ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷம் இந்து இயக்கங்களால் தேர்தல் நேரத்தில் முன்வைக்கப்படுவதோடு சரி. அவர்களுக்கே அதில் அவ்வளவு நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்த 7 ஆண்டுகளில் இதை எளிதில் நிறைவேற்றி இருக்கலாம். தி.மு.க.வுக்கு பா.ஜ.வின் தயவு தேவையாக இருந்தபோது, ஆதரவு கொடுக்க இதை முதன்மையான நிபந்தனையாக வைத்திருந்தால் தன் குடும்ப நலன் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படாத கருணாநிதி அறநிலையத் துறையை உடனடியாகக் கலைத்திருப்பார். அப்படி நடக்காமல் போனதற்கு, நிச்சயம் கருணாநிதி காரணமல்ல.

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home